ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கமல்ஹாசனின் 'விருமாண்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. தொடர்ந்து கொம்பன், தெறி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதேசமயம் நிஜத்தில் இவரை பலருக்கும் பிடிக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சாய் தீனா, தொடர்ந்து சமூகம் குறித்து மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் பேசி வருகிறார். பேச்சோடு மட்டுமல்லாமல், தனது பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் கூட வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்தார். இந்நிலையில், சாய்தீனா, பிக்கு மெளரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்று தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அவரது இந்த அதிரடி மதமாற்றம் சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.