ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை சாச்சி இயக்கியிருந்தார். இந்த படத்தின் துவக்க காட்சியிலேயே இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை அட்டப்பாடி மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான நஞ்சியம்மா என்பவர் பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுடன் நஞ்சியம்மாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தப் பாடலுக்காக நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
மேலும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வந்துபோகும் மிகச்சிறிய வேடம் ஒன்றிலும் நடித்து இருந்தார் நஞ்சியம்மா. இந்த நிலையில் தற்போது டைம் டிராவல் கதையை மையப்படுத்தி உருவாகும் திரிமூர்த்தி என்கிற படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நஞ்சியம்மா. அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். இசையமைப்பாளர் சரத்லால் நேமிபுவன் என்பவர் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.