ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் அவ்வப்போது கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை வெளியிட்டு வருகின்றது. பெண்களை மையப்படுத்திய அந்தப் படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு இருக்கிறது.
இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படமும் வெளியாகிறது. இரண்டு படங்களிலும் கதாநாயகிகளின் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது.
'யசோதா' படத்தில் சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துளளதாகத் தெரிகிறது. 'டிரைவர் ஜமுனா' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பெண் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். இவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தப் படங்களின் கதை. பெண்களை முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஆச்சரியம்தான்.
அந்தப் படங்களோடு நவம்பர் 11ம் தேதியன்று 'மிரள், பரோல், திருமாயி' ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.