நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'யசோதா' படம் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக தனது உடல்நிலையையும் மீறி ஒரு நாளை ஒதுக்கியுள்ளார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் சமந்தா தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தாலும் 'யசோதா' படத்திற்காக அவர் புரமோஷன் செய்கிறார்.
நேற்று இது குறித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “எனது நல்ல நண்பர் ராஜ் சொல்வது போல, நாள் எப்படியிருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், “குளி, ஷேவ், வெளிப்படுத்து” என்பதே அவருடைய குறிக்கோள். 'யசோதா' படத்தின் புரமோஷனுக்காக, நான் ஒரு நாள் கடன் வாங்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். அந்த ஒரு பதிவை மட்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
தாங்கள் நடிக்கும் படங்கள் வெளியானால் அது பற்றி எந்த ஒரு பேட்டியோ, அந்தப் படங்களின் விழாக்களிலோ கூட கலந்து கொள்ள மறுக்கும் சில ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு மத்தியில் தனது உடல்நலனையும் மீறி சமந்தா எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு சினிமா உலகத்தினரையும், ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.