நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'விக்ரம்'. அப்படத்தின் வெற்றியும், வசூலும் கமல்ஹாசனை மேலும் சில பிரம்மாண்ட படங்களை எடுக்க தைரியத்தைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக உள்ள 'கமல்ஹாசன் 234'வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
'விக்ரம்' படத்தின் வெற்றியால் சில பல சர்ச்சைகள், பஞ்சாயத்துகளால் நின்று போன 'இந்தியன் 2' படத்தை மட்டும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவுகளை எட்டி படத்தை உடனடியாக ஆரம்பித்துவிட்டார்கள். இந்த படத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இணைந்ததுதான் அதற்கு முக்கிய காரணம் என்றும் சொன்னார்கள். 'விக்ரம்' படத்தை விட பெரும் வெற்றியை 'இந்தியன் 2' படத்தால் கொடுக்க முடியும் என்பதே அதற்கு முக்கிய காரணம்.
அதே சமயம், ஆறு வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிக்க ஆரம்பமாகி, அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்பும் நடந்த 'சபாஷ் நாயுடு', மற்றும் அறிவிக்கப்பட்டு, சில வீடியோ புரமோஷன்களும் செய்யப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய படங்களை மீண்டும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அடுத்து ஷங்கருடன் 'இந்தியன் 2', மணிரத்னத்துடன் 'கமல்ஹாசன் 234' என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான்' ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிப்பாரா என்பது சந்தேகம்தான் என்பது கோலிவுட் தகவல்.