மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 நகைச்சுவை நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, தான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன் என்றும் விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர். அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். மறைந்த நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர். அப்துல் கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர். நான் இயக்குனர் சொல்வதை மட்டும் தான் நடித்து வருகிறேன்.
நான் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மண்டேலா போன்ற படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல. அதனால் நான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன்.காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான் அது மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு கூறினார்.