திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியாபட், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்ற வேடத்தில் நடித்திருந்தார். மேலும் ஆலியா பட்டும், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார் ஆலியா பட். அதன் பிறகு அவ்வப்போது தான் கர்ப்பிணியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து பாலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் ஆலியாபட் -ரன்பீர் கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.