இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

'பாவக்கதைகள்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'ராவுத்தர்' கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடன இயக்குனரும், நடிகருமான ஜாபர் சாதிக். அவர் அளித்த பேட்டி...
ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தேன். எதிர்காலம் சினிமாத்துறை என தீர்க்கமாக இருந்ததால் கல்லுாரிக்கு செல்லவில்லை. இயக்குனர் விக்னேஷ்சிவன் குழுவில் உள்ள நண்பர் மூலம் 'பாவக்கதைகள்' நடிகர்கள் தேர்வு ஆடிஷனில் பங்கேற்று தேர்வானேன். அதில் நான் நடித்த 'லவ் பண்ண விட்றணும்' வசனம் பாப்புலர் ஆகிவிட்டது.
'பாவக்கதைகள்' படிப்பிடிப்பு முடிந்த 6 நாட்களிலேயே 'விக்ரம்' படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைத்து, 'கமலின் கால் கட் பண்ணும் கதாபாத்திரம்' எனக் கூறினார். திடீர்னு வாழ்க்கையில் 'சர்ப்ரைஸ்' கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை போல் இனம்புரியாத சந்தோஷம் கிடைத்தது. எட்டு ஆண்டுகள் நடனம் ஆடிக்கிட்டு இருந்தேன். ஒரு நடிகருக்கு அந்த கதாபாத்திரத்தால் என்ன மனநிறைவு கிடைக்குமோ அதை நான் உணர்ந்தேன். கமல் பாராட்டினார்.
'வெந்து தணிந்தது காடு' ராவுத்தர் கதாபாத்திரம் இயக்குனர் கவுதம் வாசுதேவமேனன் சாய்ஸ். இயக்குனர் சொல்வதை நடித்து விடுவேன். கூடுதல் பலமாக ஜிம்னாஸ்டிக், டான்ஸ் தெரிந்ததால் அந்த வில்லன் ராவுத்தர் கதாபாத்திரம் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டது.ஒரு டான்சரா சிம்புவை சின்ன வயதில் இருந்தே பிடிக்கும். அப்படி நான் பார்த்த மனிதரோடு நடிக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் திலீப்புடன் இணைந்து 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கு வெப் சீரிஸ், மூன்று தமிழ், ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறேன் என்றார்.