நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். அடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் காசிக்கு புனித பயணம் சென்றிருந்தார் விஷால்.
அங்கு தனது அனுபவத்தை பகிர்ந்த விஷால் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியை பாராட்டி இருந்தார். “அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக சல்யூட்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை ரீ-டுவிட் செய்துள்ள மோடி, “உங்களுக்கு காசியில் நல்லதொரு அனுபவம் கிடைத்தற்காக நன்றி” என்று தெரிவித்துள்ளார்.