ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வரும் போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய காரின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரம்பா டுவிட்டரில், “குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் ஒரு சந்திப்பில் எங்கள் கார் மீது மற்றொரு கார் மோதியது. நான், எனது குழந்தைகள், செவிலித் தாய் ஆகியோருக்கு லேசான காயம். ஆனாலும், பாதுகாப்பாக இருக்கிறோம். எனது குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாள். மோசமான நாட்கள், மோசமான நேரம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் பிரார்த்தனைகளுக்கு நிறைய அர்த்தம் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.