மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே கன்னட திரைப்படங்கள் தங்களது வியாபார எல்லையை வைத்திருந்தன. ஆனால் கே ஜி எப் படத்தின் பான் இந்திய வெற்றி அதன்பிறகு கன்னட சினிமாவின் மீது மற்ற திரையுலகங்களின் பார்வையை திருப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் அதன் முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த நயன்தாரா திரைப்படம் கேஜிஎப் ஏற்படுத்தியது போன்று தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை இன்னொரு கன்னட திரைப்படம் முறியடிப்பதற்கு நீண்ட நாள் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது காந்தாரா திரைப்படம் கேஜிஎப் படத்தின் சில சாதனைகளை முறியடிக்க துவங்கியுள்ளது.
அந்தவகையில் இதற்கு முன்னதாக கர்நாடகாவில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகத்திற்கு 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. தற்போது இதுவரை காந்தாரா திரைப்படத்திற்கு அதைவிட மூன்று லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு கர்நாடகாவில் மட்டும் 77 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு லட்சம் டிக்கெட்டுகளை தாண்டினால் காந்தாரா திரைப்படம் அந்த சாதனையையும் முறியடிக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட நெருங்கி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றபிறகு தான் காந்தாரா இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறது என்பது முழுதாக தெரியவரும்.