நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் 169வதுபடமாக உருவாகும் இதில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படம் முடிந்த பின் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினி. இதுதொடர்பாக லைகாவின் சுபாஷ்கரன், தமிழ்குமரன் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை டான் புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், மற்றொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நவ., 5ல் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.