திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
செப்டம்பர் மாதத்தில் வெளியான இரண்டு படங்களான 'பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய படங்கள் மொத்தமாக 700 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளன. தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. அதே தினத்தில் கன்னடத்தில் தயாரான 'காந்தாரா' படம் வெளிவந்தது. வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
200 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மட்டும் 500 கோடி வசூலைத் தொட உள்ளது. 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'காந்தாரா' படத்தின் வசூல் 'பொன்னியின் செல்வன்' வசூலை விட அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் மற்ற மொழிகளில் 'காந்தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரண்டு படங்களும் ஓடிடி வெளியீட்டிலும் மோத உள்ளன. இரண்டு படங்களும் அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்கும் ஓடிடி தளத்திலும் போட்டியுடன் கூடிய அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.