நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரளாவை சேர்ந்த வித்யா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்காத நிலையில் சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'வள்ளி' நெடுந்தொடர் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 'அபியும் நானும்' தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யா மோகன், இனி தாலியை கழட்டி விட்டு நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 'என் தாலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் போட்ட முதல் செயின். அதை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படியொரு நிலை வந்தால் அந்த புராஜெக்டையே வேண்டாம் என கூறிவிடுவேன்' என கூறுகிறார். இந்த பேட்டியை பார்க்கும் பலரும் வித்யா மோகனுக்கு தாலி மீது இருக்கும் செண்டிமெண்டையும் கலாச்சாரத்தை மதிக்கும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.