நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கன்னடத்தில் ஒரு சிறிய படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதற்கு அடுத்து தெலுங்கில் கீதாகோவிந்தம் என்கிற படத்தில் அதிலும் குறிப்பாக அது இடம்பெற்ற ‛இன்கேம் காவாலே' என்கிற ஒரே பாடலில் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா கடந்த வருடம் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.
தற்போது சமீபத்தில் அமிதாப்பச்சனுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து நடித்து வந்த ராஷ்மிகா தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'எப்போது பண்டிகை என்றாலும் எனது குடும்பத்துடன் ஒன்றாக கொண்டாடுவதை தவிர்க்கவே மாட்டேன். அதுமட்டுமல்ல தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகைகளுக்கு முன்பாக தங்கம், வெள்ளி வாங்குவதை ஒரு சென்டிமெண்ட் ஆகவே கடைபிடித்து வருகிறேன்.
தற்போது என்னுடைய புதிய படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவும் இதேபோன்று தங்கம் அல்லது வெள்ளியை வாங்கி வருகிறேன். எங்கள் வீட்டில் எனது தந்தை என்னையும் எனது சகோதரியையும் பற்றி கூறும்போது நீங்கள் தான் இந்த வீட்டின் லட்சுமி என்று குறிப்பிடுவார். அது எனக்கு மிக பெருமையாக இருக்கும். அந்த லட்சுமியை வரவேற்கும் விதமாகத்தான் இப்படி பண்டிகைக்கு முன்பாக தங்கம் வெள்ளி வாங்குகிறேன்” என்று கூறுகிறார் ராஷ்மிகா.