மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
புராணங்களை படமாக்குவதில் தெலுங்கு சினிமா எப்போதும் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராமவுலி மகாபாரதத்தை தனது கனவு படமாக அறிவித்துள்ளார். அதேபோன்று அல்லு அர்ஜூன் தனது கனவு படமாக ராமாயணத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவதால் அல்லு அர்ஜூன் தனது திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்த கேள்விக்கு அல்லு அர்ஜூன் அளித்த பதில் வருமாறு: நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை, கைவிடப்படவும் இல்லை. ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
இந்த படம் இந்தியாவிலேயே பெரிய படமாகவும், பெரிய பட்ஜெட்டில் எடுத்த படமாகவும் இருக்கும். ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்க போவதாக அறிவித்த நேரத்தில் பட்ஜெட் ரூ.500 கோடி. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன என்கிறார் அல்லு அர்ஜூன்.