விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருவதால் சென்னை அண்ணா சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அங்கே படையெடுத்தார்கள். அஜித் இருந்த கேரவனை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதையடுத்து கதவை திறந்து உள்ளே நின்றபடியே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து சென்றார் அஜித்குமார். அப்படி அவர் கேரவனுக்குள் நின்றபடி ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .