நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகள் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருவதால் சென்னை அண்ணா சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்கள் அங்கே படையெடுத்தார்கள். அஜித் இருந்த கேரவனை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதையடுத்து கதவை திறந்து உள்ளே நின்றபடியே ரசிகர்களைப் பார்த்து கையசைத்து சென்றார் அஜித்குமார். அப்படி அவர் கேரவனுக்குள் நின்றபடி ரசிகர்களை சந்தித்த வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .