படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சினிமாவில் வில்லன் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரது மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது 56 வயதாகும் நடிகர் பப்லு ஒரு 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து சோசியல் மீடியாவில், 56 வயது நபர் 23 வயதை பெண்ணை திருமணம் செய்துள்ளாரா? என்று பலரும் இந்த செய்தியை பரபரப்பாக்கி வருகிறார்கள்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பப்லு அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், இது குறித்து என்னிடம் பலரும் கால் பண்ணி கேட்கிறார்கள். நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இன்னும் செய்து கொள்ளவில்லை. நான் எது செய்தாலும் வெளிப்படையாக செய்ய நினைப்பவன். அதனால் அனைவரது ஆசிர்வாதத்தோடுதான் இரண்டாவது திருமணம் செய்வேன். திருட்டுத்தனமாக செய்ய மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்த விளக்கத்தின் மூலம் பப்லு இன்னும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேல்தான் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.