மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கடந்த ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக பாடகி சின்மயி அறிவித்தார். அப்போது முதலே வாடகைத்தாய் மூலம் அவர் குழந்தை பெற்றதாக பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில் தான் கர்ப்பமாக இருந்த சமயம் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து அதுபற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சின்மயி.
அதோடு இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் போட்டோவையும் பகிர்ந்தார். அவர் வெளியிட்ட இந்த போட்டோவிற்கு ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இந்த கமெண்ட்டை பார்த்து செம கடுப்பாகி விட்டார் சின்மயி.
அந்த நபரின் சமூகவலைதள கணக்கை பகிர்ந்து, ‛‛ஏற்கனவே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் எனது கர்ப்பக்கால போட்டோவை நான் வெளியிடவில்லை. அது தான் உண்மையான காரணம். என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்கதான். பொறுக்கித்தனம் அவர்களது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கிறது. அவர்களது வளர்ப்பு அப்படி'' என கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.