மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் லைலா. சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது ரீ-என்ட்ரி குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு மனைவியாக, தாயாக எனக்கு நிறைய கடமைகள் இருந்தது. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அவங்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. இதனால், சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய கணவர் மும்பையில் பிசினஸ் செய்கிறார். அதனால் குடும்ப பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவரது தம்பி மூலம் ரீ-என்ட்ரி ஆகுறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது சினிமா நிறைய மாறி இருக்கிறது. மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை, வித்தியசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என்கிறார் லைலா.