நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
16 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் லைலா. சர்தார் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். தனது ரீ-என்ட்ரி குறித்து அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பிறகு மனைவியாக, தாயாக எனக்கு நிறைய கடமைகள் இருந்தது. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். அவங்களை வளர்க்கும் பொறுப்பு என்னுடையது. இதனால், சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய கணவர் மும்பையில் பிசினஸ் செய்கிறார். அதனால் குடும்ப பொறுப்பு அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன்.
16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான நல்ல கதைக்கு காத்திருந்தபோதுதான் மித்ரன் வந்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும் சூர்யாவுடன் நடித்து பாப்புலர் ஆனேன். இப்போது அவரது தம்பி மூலம் ரீ-என்ட்ரி ஆகுறேன் என்பதே சந்தோஷமாக இருக்கிறது.
இப்போது சினிமா நிறைய மாறி இருக்கிறது. மரத்தை சுற்றி டூயட் பாடுகிற ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. கதைக்குள் அவர்கள் இருக்கிறார்கள். எல்லா கேரக்டர்களுக்கும் முக்கியத்தும் இருக்கிறது. நல்ல சினிமாக்களை, வித்தியசமான சினிமாக்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை படைப்பாளிகள் கொடுக்க வேண்டும் என்கிறார் லைலா.