ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஷ்சர் ஹண்டர் பாணியிலான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் படமாக உருவாகிறது. இதன் கதையை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார்.
இந்த படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து அது இறுதிகட்டத்தையும் அடைந்துள்ளது. இதுவல்லாமல் ஒரு முக்கியமான ஹாலிவுட் நடிகர், நடிகையும் நடிக்க இருக்கிறார்கள்.
தீபிகா தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.