ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி' படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே அறிமுக இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு, அவர் அடுத்ததாக தானே ஹீரோவாக மாறி லவ்டுடே என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளதாக புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் வெளியான பின்னர் இயக்குனர் விஜய்யை சந்தித்து ஒரு கதையின் அவுட்லைனை கூறியதாகவும், அதன் மையக்கரு விஜய்யை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ள பிரதீப் ரங்கநாதன் எதிர்காலத்தில் விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தால் அதை நூறு சதவீதம் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.