நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி' படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே அறிமுக இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு, அவர் அடுத்ததாக தானே ஹீரோவாக மாறி லவ்டுடே என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளதாக புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் வெளியான பின்னர் இயக்குனர் விஜய்யை சந்தித்து ஒரு கதையின் அவுட்லைனை கூறியதாகவும், அதன் மையக்கரு விஜய்யை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ள பிரதீப் ரங்கநாதன் எதிர்காலத்தில் விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தால் அதை நூறு சதவீதம் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.