மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஜெயம் ரவி நடித்த ‛கோமாளி' படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்திலேயே அறிமுக இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி விட்டு, அவர் அடுத்ததாக தானே ஹீரோவாக மாறி லவ்டுடே என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஒரு கதை கூறியுள்ளதாக புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படம் வெளியான பின்னர் இயக்குனர் விஜய்யை சந்தித்து ஒரு கதையின் அவுட்லைனை கூறியதாகவும், அதன் மையக்கரு விஜய்யை கவர்ந்து விட்டதாகவும் கூறியுள்ள பிரதீப் ரங்கநாதன் எதிர்காலத்தில் விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தால் அதை நூறு சதவீதம் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.