நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கன்னட திரையுலகிற்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‛காந்தாரா' திரைப்படம். இந்தப்படத்தை இயக்குனர் ரிஷாப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். வழக்கமான ஒரு சராசரி கன்னட படம் என்கிற அளவிலேயே வெளியான இந்தப்படம், மேக்கிங் மற்றும் அதில் சொல்லப்பட்ட கதையம்சம் ஆகியவற்றால் தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, “தெலுங்கில் எனது தயாரிப்பில் ரிஷாப் ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அதற்கேற்ற கதையும் காலமும் கனிந்து வரும்போது அதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் ரிஷாப் ஷெட்டி தனது அடுத்த படம் பற்றி கூறும்போது, அது என் கையில் இல்லை. கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று தத்துவார்த்தமாக பதில் கூறியுள்ளார்.