நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மலையாளம், மற்றும் தமிழில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருபவர் அஞ்சலி நாயர். மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் போலீஸ் உளவாளியாக நடித்திருந்தவர், இந்த அஞ்சலி நாயர் தான். அதுமட்டுமல்ல அண்ணாத்த திரைப்படத்தில் இளம் வயது ரஜினிகாந்திற்கு அம்மாவாக சிறப்பு தோற்றத்திலும் இவர் தான் நடித்திருந்தார்.
ஏற்கனவே திருமணமாகி இருந்த இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவதாக கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தான் நடித்த படம் ஒன்றுக்கு டப்பிங் பேசுவதற்காக தனது கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு வந்த அஞ்சலி நாயர் குழந்தையை தனது மடியில் கிடத்தியபடியே தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஞ்சலி நாயர். கைக்குழந்தையுடன் இருந்தாலும் தன்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிரத்தையுடன் அவர் டப்பிங் பேச வந்தது குறித்து நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.