மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நட்சத்திரம் நகர்கிறது படத்தைத் தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தின் கதை கேஜிஎப் பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நடிகை பார்வதி ஒப்பந்தமாகியுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் துவங்கி நடைபெற்று வருவதாகவும் இதில் கலந்துகொண்டு பார்வதி நடித்து வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் படக்குழுவினர் இது பற்றி ஒரு சிறிய தகவலை கூட வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், அதன்பிறகு இந்தப்படத்தின் படப்பிடிப்பு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் இந்த படத்தில் பணியாற்ற இயலவில்லை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார் என்றும், அவருக்கு பதில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..