ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர் அளித்த புகாரின் பெயரில், சீரியல் நடிகர் அர்னவ் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைமிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி அர்னவ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அர்னவ் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு அம்பத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அர்னவின் முன்ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அர்னவ் தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.