நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தை உலகம் முழுவதும் இன்னும் வெளியாகாத நாடுகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த விதத்தில் ஜப்பான் நாட்டில் இப்படம் நாளை அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. அங்கு படத்தைப் பிரபலப்படுத்த இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர். அங்கு ஜப்பானிய பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஜப்பான் நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அது போலவே இந்தப் படமும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் 1998ம் ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட தமிழ்ப் படமான ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் அந்த இரண்டு படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.