நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய படங்களில் 'சென்னை 28, மங்காத்தா, மாநாடு' பெரிய வெற்றி பெற்ற படங்கள். தற்போது தெலுங்கு, தமிழில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ்' படம் நாளை(அக்.,21) தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. அதற்காக நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் உடனுக்குடன் பதிலளித்தார் சிவகார்த்திகேயன்.
அப்போது இயக்குனர் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயனிடம், “புரோ, நாம எப்போ ஷுட்டிங் போலாம், அப்புறம் நம்ம அனுதீப் உங்களை ஏதாவது டார்ச்சர் பண்ணாரா,” எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன், “ஷுட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். அந்த கதை எப்ப சார் கேக்கலாம்…அதே மாதிரி இன்னொரு கேள்வி எனக்கு இருக்கு சார். நான் உங்ககிட்ட கேக்கறேன். அந்தப் படத்துல பிரேம்ஜி பிரதரோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன், அதைத் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன் சார்,” என பதிலளித்தார்.
சிவகார்த்திகேயனின் கேள்விக்கு, ''கதையா” என்று ஒரு வார்த்தையில் மட்டும் பதிலளித்து வடிவேலுவின் குட்டி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இதுவரையிலும் தன்னுடைய படங்களில் கதை என்பது இருந்ததே இல்லை என்று எப்போதுமே ஜாலியாகப் பேசுவார். ஆனால், 'மாநாடு' கதைக்கும், திரைக்கதைக்கும் அவருக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.