ப்ரியா ஆனந்த் "குண்டு பார்முலா | "மேன் ஆப் ஸ்டீல் | பள்ளி பாட புத்தகத்தில்பிரியங்கா சோப்ரா | தீபிகாவிடம் நேற்று இல்லாத மாற்றம் | விஜய் - அமலா ஜோடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு | சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! |

"பழசிராஜா" உள்ளிட்ட பல மலையாளப் படங்களின் கதாசிரியரும், மலையாள திரைப்பட எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தலைவராக உள்ள அமைப்பு "துஞ்சன் மெமோரியல் டிரஸ்ட்". இந்த அமைப்பும் சாகித்ய அகாடமியும் இணைந்து தென்னிந்தி இளம் கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதைத் திருவிழாவை நடத்துகிறது. இதில் மொழிக்கு ஒரு இளம் கவிஞரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவப்படுத்துகிறது. தமிழ் மொழியிலிருந்து பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற 10ம் தேதி மணப்புரம் மாவட்டம் திரூரில் நடக்கும் இந்த விழாவில் நா.முத்துகுமார் கவுரவப்படுத்தப்படுகிறார். "என் மொழி என் கவிதை" என்ற தலைப்பில் தான் எழுதிய சிறந்த கவிதைகளை அவர் படிக்கிறார்.