22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். 'ஜாதி ரத்னலு' தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கி இருக்கிறார். உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வன்முறையோ, வில்லனோ இல்லாமல் ரொம்ப ஜாலியாக உருவாகி உள்ள படம் பிரின்ஸ். இரண்டரை மணி நேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு புதிய முயற்சின்னும் சொல்லலாம். ஒரு வெளிநாட்டு பெண்ணை தமிழ் பையன் காதலிக்கிறது தான் படம். காமெடி பண்றது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை சவாலா ஏத்துக்கிட்டு பண்ணியிருக்கோம்.
இது பக்கா தமிழ் படம் தான், தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறோம். மற்றபடி இரு மொழிகளில் தயாராகவில்லை. இயக்குனர் தெலுங்கு என்பதால் அப்படியான ஒரு தகவல் பரவி இருப்பதாக நினைக்கிறேன். ஹீரோயின் கதைப்படி வெளிநாட்டு பெண் என்பதால் மரியாவை நடிக்க வைத்திருக்கிறோம். இருவருமே ஆசிரியர்களாக நடித்திருக்கிறோம். இன்றைக்கு முக்கிய தேவை மனிதாபிமானம் அதை இந்த படம் வலியுறுத்துகிறது.
எனது படங்கள் தயாரிப்பாளருக்கு தியேட்டரில் வெளிவருதற்கு முன்பே லாபத்தை கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த படமும் அப்படித்தான் ஆனால் எவ்வளவு லாபம் என்று தெரியாது. அடுத்து மாவீரன் படம் வெளியாகும், அயலான் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அடுத்து கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.