22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் அருள்நிதி ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள்,. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டவர் கடந்த ஜூன் மாதம் தாய் ஆனார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, அம்மா கடமைகளை முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்கத் தயாராகி விட்டதை அறிவித்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ராமண அவதாரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.