விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள், வெப் தொடர்கள் அதிக அளவில் வெளியாகும். இந்தியாவில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. முதன் முறையாக நடத்தை மையமாக கொண்டு 5678 என்ற பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி உள்ளது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப் தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
இந்த தொடரை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்துள்ளனர். செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்துள்ளனர்.
சமூகத்தின் அடிதட்டில் இருக்கும் இளைஞர்கள் இணைந்து ஒரு நடன குழுவை உருவாக்குகிறார்கள். திறமை இருந்தும் அதற்கான வாய்ப்பை பெறுவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறார்கள். பணக்காரர்கள் எளிதில் வெற்றி பெற முடிகிற ஒரு தளத்தில் இவர்கள் எப்படி போராடி வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் இந்த தொடரின் கதை.
இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது : இளமை நிறைந்த மற்றும் திறமைமிக்க நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரின் படப்பிடிப்பின் போது சுதந்திர மனப்பான்மை கொண்ட இந்த இளைஞர்கள் நிறைந்த உத்வேகத்துடன் மிகக்கடுமையான உழைப்பை வழங்கினர். இந்தத் தொடர் உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளின் பார்வையாளர்களை சென்றடைந்து அவர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தொடரை பார்வையாளர்கள் இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம். என்றார்.