நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிலிம் சேம்பர் என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். அதன்படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ரவி கொட்டாரக்கரா தலைமையிலான அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி (தயாரிப்பாளர் சங்க தலைவர்), செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரியாக முன்னாள் தலைவர் கல்யாண் பணியாற்றினார்.