நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சென்னை : வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக, நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நேரில் விசாரிக்க, அரசு அமைத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், சென்னையில் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நான்கு மாதங்களே ஆகும் நிலையில், 'நானும், நயன்தாராவும் அம்மா, அப்பா ஆனோம்' என, சமூக வலைதள பதிவில், விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
வாடகை தாய் வாயிலாக, நயன்தாரா குழந்தை பெற்றது தெரிய வந்தது. இதில், விதிமுறைகள் மீறப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. விசாரணை நடத்தப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, 2021 டிசம்பரிலேயே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தால், மருத்துவமனை நிர்வாகம், அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வாடகை தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவனிடமும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.