நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிக சிலரே. அந்த வகையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாதமான் மற்றும் கார்த்தியுடன் இணைந்து நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற இவர் கதாநாயகியாக நடித்த, மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. அதை தொடர்ந்து தற்போது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இதுகுறித்த அறிவிப்பை பிரியா பவானி சங்கர் போஸ்டருடன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர் படக்குழுவினர். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்செயா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.