நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல வருடங்களாகவே உலக அளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி 'எப்எம்எஸ்' என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். 'எப்எம்எஸ்' என்பதற்கு 'பாரின் மலேசியா சிங்கப்பூர்' என்று அர்த்தம். ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள்தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் தரும் நாடுகளாக இருந்தது. அதற்குப் பிறகு இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இப்போதும் பேச்சு வழக்கில் சினிமாத் துறையினர் 'எப்எம்எஸ்' என்று அழைத்தாலும் அது 'ஓவர்சீஸ்' என்று வளர்ந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.