நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன், 'டுவிட்டரில்' பதிவிட்டார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பிறந்திருப்பதால், உரிய விதிமுறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்குனர் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள, பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில், 2021 டிச., மாதத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாகவே குழந்தை பெற்று எடுத்ததாகவும், விதி மீறப்படவில்லை எனவும், விசாரணை குழுவிடம், நயன்தாரா தரப்பில் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்து உள்ளதாக தெரிகிறது.