விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை அந்த செய்தியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் தகவல் உண்மைதான். இதில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதியும் , விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானபோதும் இரண்டு படங்களுக்குமே சமமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மோதிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாரிசு, துணிவு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.