நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மாநாடு, மன்மதலீலை படங்களை தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜீவா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை தொடர்ந்து பிரியாமணியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நடிகர் சம்பத்தும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.