முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தாய்லாந்து நாட்டில் தனது பைக் பயணத்தை தொடங்கி இருக்கிறார் அஜித்குமார். அப்போது அவர் அங்குள்ள ஒரு புத்தர் சிலைக்கு முன்பு தான் நின்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், அமைதிக்கு முன்பு ஒரு புயல் என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.