நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முக்கிய சரித்திரப் படமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய நாவலை எம்ஜிஆர், கமல்ஹாசன் படமாக்க முயன்று நடத்தாமல் கைவிட்டனர். ஆனால், மணிரத்னம் அதை எடுத்து முடித்து முதல் பாகத்தையும் வெளியிட்டு நல்லதொரு வரவேற்பையும், வசூலையும் பெற்றுவிட்டார்.
இரண்டு வாரங்களில் இந்தப் படம் ரூ.400 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தமிழ் சினிமாவில் மிக விரைவில் ரூ.400 கோடியைக் கடந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.
இன்று படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இப்படத்திற்கான முன்பதிவுகள் சிறப்பாகவே உள்ளது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 60 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐமேக்ஸ் தியேட்டர்களில் 90 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
அடுத்த வாரம் அக்டோபர் 21ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'பிரின்ஸ், சர்தார்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. அதனால், அக்டோபர் 20ம் தேதி வரை 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான வார நாட்களின் ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வார இறுதி நாட்களின் வசூல், அடுத்த வார நாட்களின் வசூல் ஆகியவற்றுடன் இன்னும் ரூ.100 கோடி கூடுதலாக வசூலித்து மொத்தமாக மூன்று வாரங்களின் முடிவில் ரூ.500 கோடியை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'பிரின்ஸ், சர்தார்' படங்கள் வந்தாலும் அடுத்த வாரத்தின் வார இறுதி விடுமுறை நாளிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான வரவேற்பு குறைய வாய்ப்பில்லை என்றே தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.