திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்த தகவலை விக்னேஷ் சிவன் வெளியிட்டதிலிருந்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகள் போட்டு உள்ளார்.
அதில், ‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். யார் உங்களுடன் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இன்னொரு பதிவில், ‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்' என்று பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.