திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களிலும் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, ஷியாம் சிங்கராய் என்ற இரண்டு படங்களில் நடித்தார் சாய் பல்லவி. அப்படி ஒரே ஆண்டில் அவர் நடித்த இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்திருக்கிறது.
அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சாய்பல்லவி, ‛இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள் அடிக்கடி நடக்காது. ஒரே வருடத்தில் இரண்டு படங்களுக்காக விருது பெற்று இருக்கிறேன். இந்த கதாபாத்திரங்களுக்காக பெற்ற அபரிமிதமான அன்பிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இது போன்ற சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.