விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் தினேஷூம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பலவருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் தினேஷ் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். எனினும், தங்கள் பிரிவு தற்காலிகமானது தான் எனவும் விரைவில் காலம் அனைத்தையும் சரி செய்யும் என்ற தொனியில் அதில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்களில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ரச்சிதா தற்போது அதிரடியாக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து தினேஷ், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் இதயங்களை வெல்ல வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். பிரிந்து இருந்தாலும் காதல் மனைவியின் மேல் அன்பாக இருக்கும் தினேஷின் குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.