நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் தினேஷூம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பலவருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் தினேஷ் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். எனினும், தங்கள் பிரிவு தற்காலிகமானது தான் எனவும் விரைவில் காலம் அனைத்தையும் சரி செய்யும் என்ற தொனியில் அதில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்களில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ரச்சிதா தற்போது அதிரடியாக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து தினேஷ், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் இதயங்களை வெல்ல வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். பிரிந்து இருந்தாலும் காதல் மனைவியின் மேல் அன்பாக இருக்கும் தினேஷின் குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.