‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் நேரடிப் படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது.
இப்படத்தின் சில புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் 'லீக்' ஆனது. அதில் அந்தக் கால இளைஞர் தோற்றத்தில் ராம் சரண், அவரது மனைவியாக நடிக்கும் அஞ்சலி ஆகியோர் உள்ள சில புகைப்படங்களும் அடக்கம். அந்தப் புகைப்படங்களை வைத்து அவை படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் ராம் சரண் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
அப்பா கதாபாத்திரத்திற்கு அஞ்சலி ஜோடியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாகவும் இருக்கலாம். அந்தக் கால தோற்றத்தில் உள்ள ராம் சரண், அஞ்சலி ஆகியோரைப் பார்ப்பதற்கு 'இந்தியன் 2' படத்தில் இடம் பெற்ற கமல்ஹாசன், சுகன்யா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளின் 'கிளாசிக்' டச் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளார்கள். 2023ம் ஆண்டில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.