நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் பாலிவுட் படம் ஜவான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பை, புனே, டில்லி உள்ளிட்ட இடங்களில் வந்தது.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி தொடர்ச்சியாக சென்னையில் நடந்தது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஷாருக்கான் மும்பை திரும்பி விட்டார்.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில், ‛‛சென்னையில் ஷாருக்கான் ஒரு மாதம் தங்கியிருந்தது, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றது என எதையும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. இதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்கிறேன். இத்தனை நாள் அவர் இங்கு படப்பிடிப்பில் பங்கேற்றதால் 1000 சினிமா தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. இதற்காகவும் ஷாருக்கிற்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.