100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் பாலிவுட் படம் ஜவான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பை, புனே, டில்லி உள்ளிட்ட இடங்களில் வந்தது.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி தொடர்ச்சியாக சென்னையில் நடந்தது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஷாருக்கான் மும்பை திரும்பி விட்டார்.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில், ‛‛சென்னையில் ஷாருக்கான் ஒரு மாதம் தங்கியிருந்தது, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றது என எதையும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. இதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்கிறேன். இத்தனை நாள் அவர் இங்கு படப்பிடிப்பில் பங்கேற்றதால் 1000 சினிமா தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. இதற்காகவும் ஷாருக்கிற்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.