நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பெரிய படங்கள் வெளியானாலும் தென்னிந்திய மொழியில் உருவாகி பாலிவுட்டில் ரிலீசாகும் படங்களானாலும் அதை அங்கு வெளியிடுபவராகவோ அல்லது தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலமாக புரமோசன் பண்ணுபவராகவோ என ஏதோ ஒரு வகையில் அவரும் அந்த படங்களுடன் இணைந்து இருப்பார்.
அதே சமயம் தனது காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சி மூலம் தனக்கு வேண்டிய நட்சத்திரங்களை குறிப்பாக ஆலியா பட், ரன்பீர் கபூர் போன்றவர்களை உயர்த்தி பிடித்து நெபோடிசத்துகு ஆதரவாகவும் தனக்கு விருப்பம் இல்லாத நபர்களை மட்டும் தட்டுவதற்கும் அந்த ஷோவை பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே அவர் மீது இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்மறை கருத்துக்கள் நிறைய வந்தவண்ணம் இருந்தன.
இன்னும் ஒருபடி மேலாக அவர் தயாரிக்கும் படங்களுக்கோ வெளியிடும் படங்களுக்கோ ஆதரவு கொடுக்க வேண்டாம் என கூறி பாய்காட் செய்யும் புதிய டிரெண்ட்டும் சமீபகாலமாக பாலிவுட்டில் இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில்தான் டுவிட்டரை விட்டு தான் வெளியேறுவதாக அறிவித்து குட்பை சொல்லி உள்ளார் கரண் ஜோஹர். இதுகுறித்து அவர் கூறும்போது பாசிட்டிவ் எனர்ஜிக்கான இடம் நிறைய தேவைப்படுவதால் டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளார்.