நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி நடித்து வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கசிந்து வருவதை அடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, தமன்னா உள்பட பல நடித்து வரும் நிலையில் தற்போது மிர்னா மேனன் என்ற மலையாள நடிகையும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மிர்னா என்ற பெயரில் தமிழில் புர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருந்த வேடத்தில் மிர்னா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.