அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ள நிலையில், படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் 3 பேர் இணைந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. ஆனால், அவர்கள் யார்? யார்? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி ரெட்டி, மற்றும் சிபி புவனசந்திரன் ஆகியோர் தாய்லாந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித்துடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அந்த புகைப்படங்களில் அஜித்தே மூவருடனும் சேர்ந்து செல்பியை கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது வெளியிட்டுள்ள பாவ்னி, 'என்ன சொல்ல, எப்படி சொல்ல? சொன்னால் யார் நம்புவார்கள். அற்புதமான மனிதர்?' என அஜித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜோடியாகவே அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அமீர் - பாவ்னிக்கும், பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு படவாய்ப்புக்காக காத்திருந்த சிபிக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மூவருக்கும் அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.