நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இன்றைய தேதியில் தென்னிந்திய அளவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார் தான். கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்து வரும் சரத்குமார், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல் தற்போது குணச்சித்திர நடிகராக, வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டதால் அவருக்கு வேறு மொழியில் இருந்தும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார், நடிகர் திலீப் நடிக்கும் படத்திலும் தற்போது முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திலீப்பை வைத்து ஏற்கனவே ராம்லீலா என்கிறார் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே மலையாளத்தில் 2011ல் வெளியான கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படத்தில் சரத்குமாரும் திலீப்பும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.